வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு குற்ற விசாரணை நுணுக்கங்களைப் பற்றி பயிற்சி வகுப்பு நடத்திய முன்னாள் ஓய்வு பெற்ற எஸ்பி அவர்கள் இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி ஐ ஜி முனைவர் முத்துசாமி மற்றும் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சித்தன்னன் பாரம்பரிய குற்ற விசாரணை குறித்தும் மற்றும் சைபர் குற்ற விசாரணை குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலு சுவாமிநாதன் ஆகியோரால் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சி வகுப்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். விசாரணையில் மேற்கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் வழக்குகளின் பிரிவுகள் பற்றி காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பில் நடத்தப்பட்டது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment