வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதமர் மோடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 February 2023

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பிரதமர் மோடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பொதுமக்களின் பணத்தை தனது நண்பர் அதானின் குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தித்த பிரதமர் மோடியைக் கண்டித்தும் அதானி குழுமத்தின் மீது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் பாரபட்சமாற்ற விசாரணை நடத்த கோரியும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று 06.02.2023 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள எஸ்பிஐ வங்கி எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் வட்டார தலைவர்கள் ஜோதி கணேசன், பெரியசாமி, தனசேகர் மாவட்ட பொது செயலாளர் பாரத். நவீன்குமார், யுவராஜ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான கே.விஜயன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு  உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம், சமூக ஆர்வலர் நாட்டாம்கார் அக்பர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  


நிகழ்வில் வட்டார தலைவர்கள் சங்கர், செல்வக்குமார், விஜயகுமார், தளபதி  பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அக்பர்பாஷா, ஜெய்சங்கர் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், சேகரன், முனிரத்தினம் மாவட்ட பொதுச் செயலாளர்கள் வாசு, பாஸ்கரன் மாவட்ட செயலாளர்கள் உவைஸ் அஹ்மத், Md. ராகிப், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ராகேஷ், ஆனந்தவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் வட்டாரத் தலைவர் எம்.வீராங்கன் நன்றியுரை கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad