

பள்ளியின் செயலாளர் இரம்யா கண்ணன் SPL & ASPL மாணவர்களின் கடமைகளையும் பொறுப்புகளை கூறி, காமராசர் பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
பள்ளியின் முதல்வர் மேகலா வரவேற்புரை ஆற்ற பள்ளியின் துணைமுதல்வர்கள் ராஜகுமாரி மற்றும் ராஜ்குமார் விழாவினை ஒருங்கிணைத்தனர். பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் பொருட்டு தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்ற SPL & ASPL மாணவர்களுக்கு பதவி பிரமானம் செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவர், செயலாளர்களை தேர்ந்தெடுத்தனார். இறுதியாக, பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியர் விந்தோஷ் குமார், நன்றியுரை கூறி விழா இனிதே நிறைவுற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment