அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் தேசிய மாதர் சம்மேளனம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் . - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 July 2023

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் தேசிய மாதர் சம்மேளனம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் .


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று மணிப்பூரை பாதுகாப்போம் வெறுப்பு அரசியலை வேரறுப்போம். நிர்வாணப்படுத்தப்பட்டது மணிப்பூர் பெண்கள் மட்டுமல்ல பாரத தாயும் தான் நீதி கேட்டும் கலவரத்தை தடுக்க தவறிய மாநில ஒன்றிய பிஜேபி அரசை பதவி விளக்கக் கோரி 29.07.23.சனிக்காலை குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது.


எஸ்.மகேஷ்பாபு கே.கல்பனாசந்தர் எல்.நிறைமதிசெல்வன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கே.ஜெயராமன் கு.வினாயகம் என்.ஜீவானந்தம் ஆர்.அக்பர் முகமது அஷ்ரப் எம்.சித்தரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரை செல்வம் சி.பி.ஐ.மாவட்ட துணை செயலாளர் டி.ஆனந்தன் சி.பி.ஐ.ஒன்றிய நகர செயலாளர் எம்.மகேஷ் இளைஞர் பெருமன்றம் மாவட்ட குழு உறுப்பினர்.மற்றும் நா.பரமசிவம் அதாவுல்லா கண்டன உரை ஆற்றினார்கள்.


அஞ்சல் அட்டையில் பாரத பிரதமர் அவர்களே மணிப்பூரை பற்றிய உங்கள் மௌனத்தை உடைத்தெரிந்து மணிப்பூர் இந்தியாவில் உள்ளது என்பதை உணர்ந்து அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்தை எழுதி குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் போடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad