வேலூர் மாவட்டம் குடியாத்தம் பசுமைத்தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய மாரத்தான் ஓட்டம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 12 கிலோமீட்டர் ஓட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பில் பருவநிலை, காலநிலை, மாற்றம் குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி பாக்கம்,ராமாலை, செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகள் வழியாக மொத்தம் 12 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசுத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் மாரத்தான் முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment