தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றனர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 December 2023

தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றனர்.


வேலூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ வேலூர் மாவட்டத்தின் சார்பில் இன்று 2000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் 2000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுமை போராட்டத்தில் பங்கேற்க சென்னை பயணம்.


வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழுவின் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன், உயர்மட்ட குழு உறுப்பினர் அ.சேகர் ஆகியோர் கூட்டு தலைமையில் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர்  ஆ.சீனிவாசன், எம்.ஜெயகாந்தன் சகேயுசத்யகுமார், ஆகியோர் முன்னிலையில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.ராமன், வாரா மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், மாவட்ட செயலாளர் ஏ திருஞானசம்பந்தம் மாவட்ட பொருளாளர் தனசேகரன் மாநில சட்ட செயலாளர் காந்தி மாவட்ட துணைத்தலைவர் எஸ் கிருஷ்ணன் ஞானசேகரன் ராஜ்குமார் ஷங்கர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜே சுந்தர் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ் கணேஷ் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.ஜெயகுமார்,  முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் அஜிஸ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, ஊரக வளர்ச்சி துறை செல்வகுமார், ஆகியோர் இன்று ரயில், வேன், பேருந்து, மூலமாக பேர்ணாம்பட்டு குடியாத்தம் கே வி குப்பம் காட்பாடி அணைக்கட்டு கணியம்பாடி வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து குழு குழுக்களாக கார் மூலமாகவும் ரயில் மூலமாகவும் 32 ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கோட்டை நோக்கி இரண்டாயிரம் பேர் சென்னை நோக்கி பயணமாகி உள்ளனர். 


சென்னை சிவானந்த சாலையிலிருந்து கோட்டை நோக்கி செல்கின்றனர். 

கோரிக்க்கைகள். 

  1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
  3. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
  4. முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள்,  ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.  கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.  மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
  5. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.  மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  6. அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
  7. 21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  8. 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
  9. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

என  மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்  செ. நா. ஜனார்த்தனன் தெரிவித்தார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad