தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவராக பே.அமுதா, செயலாளராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 January 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவராக பே.அமுதா, செயலாளராக செ.நா.ஜனார்த்தனன் தேர்வு.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18வது வேலூர் மாவட்ட மாநாடும் புதிய நிர்வாகிகள் தேர்வும் இன்று 21.01.2024ல் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவராக பே.அமுதா, செயலாளராக செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக மாவட்ட வேலை அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய மாநாடுகள் குறித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சா.குமரன், பெ.ராமு, ஆர்.வேல்முருகன், ராதாகிருஷ்ணன், எஸ்.மகாலிங்கம், எஸ்.இளவழகன்,  உள்ளிட்டோர் பேசினர். 


முன்னாள் மாநில பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன், மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் முத்து சிலுப்பன், பா.ராஜேந்திரன்  ஆகியோர்  தேர்தல் அலுவலர்களாக செயலாற்றி புதிய நிர்வாகிகளை அறிவித்தனர்.  

பின்வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக பே.அமுதா, செயலாளராக செ.நா.ஜனார்த்தனன்,  பொருளாளராக வீ.குமரன்,  துணைத்தலைவர்களாக கே.விசுவநாதன், பேரா.கே.தேவி, பொன்.வள்ளுவன், ஆர்.காயத்ரி, டாக்டர்.கணேசன், பேரா.விநாயகமூர்த்தி, இணை செயலாளர்கள் எ.பாஸ்கர், மு.பிரபு, என்.கோட்டீஸ்வரி, பி.ரவீந்திரன், எம்.மதன், சி.எப்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


மேலும் 15பேர் கொண்ட நிர்வாக்குழு மற்றும் கு.செந்தமிழ்செல்வன், எம்.சிலுப்பன், கோபால இராசேந்திரன், பா.ராசேந்திரன் உள்ளிட்ட 45பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்பட்டனர். அறிவியல் இயக்க நாட்காட்டி வெளியீடு உறுதிமொழி ஏற்பு சர்வதேச அறிவியல் நிகழ்வுகள் குறித்த விவரங்களை கொண்ட நாட்காட்டியினை மாவட்ட தலைவர் பே.அமுதா வெளியிட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். அறிவியல் இயக்கத்தின் கோட்டுபாடுகளை கடைபிடிக்கும் விதமாக அறிவியல் சுயசார்பிற்கே, அறிவியல் மக்களுக்கே, அறிவியல் சமூக மாற்றத்திற்கே, அறிவியல் நாட்டிற்கே என்ற உறுதிமொழியினை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.


தமிழ்நாடு அறிவியல் இயக்க 18 வது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  1. பள்ளிக் கல்வியில் தமிழக அரசு கொண்டு வந்த செய்து கற்பித்தல் முறை ஸ்டெம் நிகழ்வை மாநாடு தமிழக அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  2. பாட புத்தகங்களில் மதம்  சார்ந்து  பதியக்கூடிய மற்றும் பாதிக்கக்கூடியவிஷயங்களை பாட புத்தகத்தில் இடம்பெற கூடாது என இம் மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  3. இந்திய அரசியலமைப்புச் சட்டம்  மக்கள் நலன் கொண்டு மாண்பு மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என இம் மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  4. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறைபடுத்தி வரும் இல்லம் தேடி கல்வியை அனைவருக்கும் திறன் மேம்பாட்டு இயக்கமாக மாற்ற இம் மாநாடு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.
  5. சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்க இம்மாநாடு ஏகமனதாககருதி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  6. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்போம் நேசிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே செய்தி ஏடுகள், நூல்கள் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்க பிரச்சார இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 
  7. வேலூர் மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் கடந்த நிலையிலும் புறவழிச்சாலைகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டுகின்றோம்.


மேலும் வேலூர் மாநகர எல்லைக்குள் நகர பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் காட்பாடி வரையும், கொணவட்டம் வழியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரையும், ஶ்ரீபுரம் தங்க கோயில் வரை, அடுக்கம்பாரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை என புதிய வழித்தடங்களில் நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தினையும் தமிழ்நாடு அரசையும் இம் மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது .


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad