வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செருவங்கி மதுரா கார்த்திகேயபுரம் கிராமத்தில் வசித்து வந்த பாரதி என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 31) வெண்புறா கபடி குழு வீரர் இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்து வருகிறார். குடும்பப் பிரச்சனை காரணமாக இன்று காலை 7 மணி அளவில் விஷம் குடித்து உள்ளார்.
உடனடியாக அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். உயிரிழந்த ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் ஆகி நந்தினி என்ற மனைவியும், திரிஷா (வயது 6) என்ற மகளும் நந்தகுமார் (வயது 4) என்ற மகனும் உள்ள இறந்த ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment