வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசிபெற்ற கழக வேட்பாளர் மருத்துவர் எஸ். பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி இன்று இரவு 7 மணி அளவில் சித்தூர் கேட்பகுதியில் திறந்த வேனில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் நடைபெற்றது.
பிரச்சாரக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் ஜவாகா் அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மாவட்ட கழக துணை செயலாளர் மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூர்த்தி வி இ கருணா ஆர்கே மகாலிங்கம் எஸ் என் சுந்தரேசன் எஸ்.டி. மோகன்ராஜ் ஏ ரவிச்சந்திரன் ஹார்டுவேர் ரவி கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேமுதிக நகர செயலாளர் மாவட்ட மகளிர் அணி மோகனா பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக மேளதாளத்துடன் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment