வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை கோயிலுக்குள் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்களை அனுமதிக்காத தொல்லியல் துறை ஆய்வாளரை கண்டித்து அகில பாரத இந்து மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சி, காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேரூந்து நிறுத்தம் அருகே, அகில பாரத இந்து மகாசபை சார்பில் வேலூர் ஜலகண்டஈஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தரிசனம் செய்ய வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்காமல் புறக்கணித்ததை கண்டித்து வேலூர் கோட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில பாரத இந்து மகாசபா கொடிகளை ஏந்தி கோஷமிட்டு தொல்லியல் துறை ஆய்வாளர் அகிலா, இரும்பு கம்பிகளை போட்டு தடுப்பு அமைத்து தரிசனத்திற்கு அனுமதிக்காமல் பக்தர்களை மிரட்டி தரிசனம் செய்ய அனுமதிக்காததை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment