இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இவர்களுக்குள் குடும்பத்த தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார் இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து இருவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்து ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார் இதில் கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment