குடியாத்தம் காவல் துறை சார்பில் போதை ஓழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு மாணவர்களின் பேரணி காவல்துறை கண்காணிப்பாளர் தொடக்கம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 June 2024

குடியாத்தம் காவல் துறை சார்பில் போதை ஓழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு மாணவர்களின் பேரணி காவல்துறை கண்காணிப்பாளர் தொடக்கம்

குடியாத்தம் ஜூன் 24

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது இதில் குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இதில் பள்ளி மாணவர்கள் போதை ஓழிப்பு குறித்து கையில் பாதகங்களை ஏந்தியவாறு சென்றனர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது இதில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி 
திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நேதாஜி 
மாணவர்கள் காவல் படை ஒருங்கிணைப்பாளர் கேசவன்
மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பத்மநாபன் சுகுமார பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad