வேலூர்ஜூலை 29
வேலூர் மாவட்டம் 30 தீர்த்தமலையில் 47 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் ஊராட்சி எஸ். மோட்டூர் கிராமத்தில் உள்ள தீர்த்தமலை ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு ஆடி கிருத்திகை திருவிழா முன்னிட்டு இக்கோயில் நிர்வாகிகள் ஆர். பாலாஜி ஆர்.ராஜாராம் ஆர்.வெங்கடத்திரி தலைமையில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக காவடிகள் சுமந்து அரோகரா அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கி வந்தனர் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்கோயிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment