குடியாத்தம் ஜூலை 29
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு ராஜ கணபதி நகர் திருமலை கார்டன் ஜெ ஜெ நகர் பகுதியில் பெருமாள் நகர் இதன் மையப்பகுதியில் புதியதாக டாஸ்மார்க் கடை திறப்பதற்கு அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் கன்னிகா பரமேஸ்வரி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் கண் விழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி ரோட்டரி கிளப் ஹயக்ரீவர் மஹால் ஏபிஎம் மஹால் போன்றவைகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவே இப்பகுதியில் டாஸ்மார்க் கடை திறப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment