குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 July 2024

குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

குடியாத்தம் ஜுலை 25

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகளான மின்வாரிய துறை ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் சார்ந்த குறிப்பிட்ட சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 44 வகையான தனிநபர் சேவைகள் கோரி அளிக்கும் மனுக்கள் ஜீலை 11 முதல் செப்டம்பர் 15 வரை காலை 10 மணிமுதல் மாலை 03 மணிவரை மனுக்கள் பெறபட உள்ளது என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளுக்கு மனுக்கள் பெற 08 கட்டமாக தேதிகள் இடம் என ஒதுக்கீடு செய்து பட்டியல் வெளியானது பட்டியலை தொடர்ந்து நேற்று குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழையாத்தம்‌ கூட நகரம் மேல்முட்டுக்கூர் சிங்கல்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் நேற்று நத்தம் ஊர் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 இதில் மேற்கண்ட ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர் மனுக்கள் பெறப்பட்டது இதில் ஒன்றிய செயலாளர் வி.பிரதீஷ்  தாசில்தார் சித்ராதேவி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத் நந்தகுமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி மீனா மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வி நித்தியானந்தம் ராஜேஸ்வரி பிரதீஷ் சூரிய கலா மனோஜ் மீனா கிழக்கு ஒன்றிய செயலாளர்  அ.அன்பரசன்  மற்றும் மேல்முட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் குமாரன் தாழையத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலு அமர் சிங்கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad