குடியாத்தம் ஆகஸ்ட் 5
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இன்று காலை உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மாறன் பாபு அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருங்குழுத்தலைவர் என் இ சத்யானந்தம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே கே என் பழனி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி
முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி ரோட்டரி சங்க தலைவர் எல்ஐசி கண்ணன் லயன்ஸ் கிளப் தலைவர் ஜே பாபு நகர மன்ற உறுப்பினர் த புவியரசி இன்னர் வீல் சங்கம் விஜயலட்சுமி கீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை பற்றியும் பாதுகாப்பை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவர்கள் செவிலியர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அத்தி மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment