வேலூர் ஆக.05
வேலூர் மாவட்டத்தில் மகளிர் விடியல் பயண புதிய 5 நகரப் பேருந்துகள் மற்றும் புதிய 17 புறநகப் பேருந்துகள் மற்றும் கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வழிகடப் பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று (05.08.2024) வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இராட சுப்புலெட்சுமி. இ.ஆ.. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன். அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாவு, துணை மேயர் மா. சுனில்குமார். மண்டலக்குழுத்தலைவர்கள் எஸ்.வெங்கடேசன், புஷ்பலதா வன்னியராஜா ஆர். நரேந்திரன், கே.யூசுப்கான், மாமன்ற உறுப்பினர் சாஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் விழுப்புரம் லிட், க. குணசேகரன். பொது மேலாளர் அ. கணபதி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment