குடியாத்தம் தாலுக்கா கூட நகரம் மதுரா பார்வதியாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் 29 ஆம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

குடியாத்தம் தாலுக்கா கூட நகரம் மதுரா பார்வதியாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் 29 ஆம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா

குடியாத்தம் ஆக 2

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் மதுரா பார்வதியாபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் ஊர் தலைவர் எஸ் கிருஷ்ணமூர்த்தி நாட்டாமை மகேந்திரன் தர்மகர்த்தா கோவிந்தசாமி மேட்டுக்குடி எம் தரணி கோவில் நிர்வாகி கே பாஸ்கர் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் சதீஷ்குமார் கோவில் பூசாரி குப்புசாமி ஸ்ரீ சக்தி இன்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பி கே குமரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி வெங்கடேசன் ஒண்ணாவது வார்டு உறுப்பினர் வித்யா ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் ருத்ர வேல் ஊராட்சி செயலாளர் வி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

இன்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்தல் இரவு 8 மணிக்கு வான வேடிக்கைகள் இரவு 11 மணிக்கு அம்மன் தேர் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது
 3-8 2024 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் இதில் ஊர் பொதுமக்கள் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad