குடியாத்தம் ஆகஸ்ட் 3
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நகராட்சியில் உள்ள வேளாண் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உழவர் சந்தை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், விவசாயிகளின் கோரிக்கையான உழவர் சந்தையை விரிவு படுத்துவது குறித்தும் வேளாண்துறை அலுவலர்க வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட அழகு பெருமாள் கோயில் தெருவில் மேற்கொள்ளப்பட்ட வரும் தீவிர தூய்மை பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது சித்ராதேவி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment