தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம்!

குடியாத்தம் ஆக 2

வேலூர் குடியாத்தம் அரசினர் திருமகள் மில் கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் அ மலா் வாழ்த்துரை வழங்கினார்
குடியாத்தம் அரசினர் திருமகள் மில் கலைக் கல்லூரி முதல்வர் வாசுகி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வுகளை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என் மணிவண்ணன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருவள்ளூர் பல்கலைக்கழகம் டாக்டர் பாபு ஜனார்த்தனன் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கே ஹரி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கே பாரதி
கணினி குற்றப்பிரிவு உதவியாளர் ஆய்வாளர் சதீஷ்  சிறப்புரையாற்றினார்கள்
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஏ பி இராமச்சந்திரன்
 குடியாத்தம் தனி வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ஏ ரவிச்சந்திரன்
சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் ஆகியோா் நன்றியுரையாற்றினா்கள்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad