குடியாத்தம், ஆக. 5
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கி
வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தத்தை அடுத்த கல்லேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தில்
கோட்டி(வயது 27), அவரது உறவினர் தரணி(வயது 24) இருவரும் வேலை செய்து வந்தனர்.
ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில்
போலீஸார் திங்கள்கிழமை மாலை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில்
அவர்கள் உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும், அதை
பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரிய வந்தது.
அப்போது கோட்டி தப்பியோடி விட்டார். துப்பாக்கியை பறிமுதல் செய்த
போலீஸார், தரணியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment