குடியாத்தம் ஆக 18
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி
மருத்துவமனையின் சார்பாக இயற்கை முறையில் வலி நிவாரண சிகிச்சை சிறப்பு முகாம் பள்ளிகொண்டா 281/3, NH-46 அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் கட்டிடத்தில் நடைபெற்றது.
அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் திரு s s யுவராஜ் MBBS.MD அவர்களின் தந்தையும் அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளருமான s சகாதேவன் அவர்கள் கலந்துக்கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் k தங்கராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் அத்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் சதிஷ், கலையரசி, ஸ்ரீவைஷ்ணவி, நந்தகுமார் ஆகியோர் அக்குபக்சர் ,அக்குபிரஷர்,யோகா மற்றும் உணவு கட்டுப்பாடு முறை மூலம் சிகிச்சை அளித்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k குமரவேல் அவர்கள், நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் சுமார் 100 நோயாளிகள் பயனடைந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment