வேலூர் ஆக.26
வேலூர் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவும், ஏ.பி. நந்தகுமார் வழங்கினார். இந்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment