கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 August 2024

கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை!

குடியாத்தம் ஆக 18

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த இந்து பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர் குமாரி (வயது 45) க / பெ சதீஷ் என்பவர் இன்று பிற்பகல் 4-30 மணி அளவில் உடல் நலக்குறைவால் கணவர் இறந்துவிட்டார். இதே சோகத்தில் இருந்த மனைவி இந்து பலிஜா வீட்டின் மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
இறந்த நபருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தகவல் அறிந்தவுடன் பரதராமி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad