மக்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம் பி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 August 2024

மக்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம் பி

குடியாத்தம் ஆக19


வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, இன்று 19-08-2024, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் மக்களவை உறுப்பினராக  இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த
குடியாத்தம் தெற்கு ஒன்றியம் பகுதி  மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குடியாத்தம்  தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பரசு அவர்கள் தலைமையில் 

 உள்ளி, சின்னதோட்டாளம், குளிதிகை, கீழ்பட்டி, வளத்தூர், கருணீகசமுத்திரம், எர்த்தாங்கல் ஆகிய கிராம 
 பகுதியில்  வாக்காளர் பெருமக்களையும்,  கழக  தொண்டர்களையும்,
கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP  அவர்கள் நேரில் 
 சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். 

உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு‌  அவர்கள்  ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்  மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பலர் மேளதாளம் மாலை ஆலம் சுற்றி உற்சாகத்துடன் வரவேற்றார்கள் அனைத்து பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி அவர்கள் நன்றி தெரிவித்தார். 


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad