ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் அமைச்சர் திறப்பு ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 11 September 2024

ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் அமைச்சர் திறப்பு !

அணைக்கட்டு செப்.11-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வல்லாண்டராமம் கிராமத்தில் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை  தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ் மனோ தங்கராஜ் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ். மனோ தங்கராஜ் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் | கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர், பால்உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை/ |நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் டாக்டர் எஸ். வினித், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு. பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய குழு துணை தலைவர் சித்ரா குமார் பாண்டியன், ஆவின் பொது மேலாளர்ஜி. இளங்கோவன், துணைப் பதிவளார் (பால்வளம்) கா. கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad