பேர்ணாம்பட்டு அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பேரணாம்பட்டு செப்1
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலபல்லி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேன் கர்நாடகா பதிவு எண் கொண்டதாக இருந்தது அதில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு கர்நாடகா மாநிலம் K G F கொண்டு செல்வதாக தெரியவந்தது இதைத்தொடர்ந்து வேணில் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வேன் ஓட்டுநர் வருண் சரண் விஜய் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பறிமுதல் செய்த 4 டன் ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment