தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.66.66 கோடி கடனுதவி வழங்கல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 September 2024

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.66.66 கோடி கடனுதவி வழங்கல்!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.66.66 கோடி கடனுதவி வழங்கல்!

வேலூர்,செப்.10-

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற, வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.66.66 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளுக்கான காசோலைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கடனுதவி பயன்பெறும் குழு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினர்.

காட்பாடி பன்னிரண்டாம் வார்டு மாமன்ற உறுப்பினரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் டீட்டா சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad