வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாகி அலுவலர்கள் கருப்பு பட்டையை அணிந்து ஆர்ப்பாட்டம்.
குடியாத்தம் செப் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கட்கிழமை மாலை கருப்பு கோட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கான உபகரணங்கள் மற்றும் மதிப்பூதியம்
வழங்கக் கோரியும், பிற மாநிலங்களில் இப்பணிக்கு செய்து தரப்பட்டுள்ள
வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரியும் கடந்த வருடம் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அளித்த வாக்குருதிகளை நிறைவேற்றாத போக்கினை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றக்
கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
கோட்டச் செயலர் வெங்கடாசலபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை
வலியுறுத்தி பேசினார்.
இதில் செயலர் ஆர்.சசிகுமார், பொருளாளர் காந்தி, வட்ட துணைத் தலைவர்
பெரியசாமி, சத்தியதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment