ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்.  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 18 October 2024

ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம். 

ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம். 

வேலூர்,அக்18-

வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட   60 வார்டுகளிலும் 1700 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான தினசரி கூலி 430 ரூபாய் கூலி மட்டுமே வழங்குவதாகவும் அதிலும் பிடித்தம் செய்து 370 ரூபாய் தூய்மை பணியாளருக்கு கொடுத்து வருவதாகவும் இதனால் தினக்கூலி உயர்வு கேட்டு இன்று வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2023 ஆம் ஆண்டின் தினசரி கூலி 538 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் 2024 ஆம் ஆண்டு தினசரி கூலி 570 தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மற்றும் வேலூர் மாநகராட்சி நிர்வாக இயக்குனர்களுக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்தனர் ஆனால் இதுவரையிலும் நிர்ணயித்த கூலி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக கூலியை உயர்த்தி தர வேண்டுமென தூய்மை பணியாளர்கள் வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad