தரை கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு
குடியாத்தம் நவ 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராமாலை அஞ்சல் காந்தி கணவாய் கிராமம் துரை என்பவருக்கு சொந்தமான 15 விட்டம் 60 அடி ஆழம் தண்ணீர் இல்லாத கிணற்றில் ராதிகா (வயது 17) D / O சோமசுந்தரம் ராமாலை அஞ்சல் காந்தி கணவாய் கிராமம் என்பவரது மகள் விழுந்துவிட்டதாக வேலூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி கோறினா்கள்
இது சம்பந்தமாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு உதவியுடன் சிறு காயங்களுடன் மேலே மீட்டு 108 வாகனம் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment