ஏரிக்கு செல்லும் தண்ணீர் கால்வாய் போதிய இணைப்பு வசதி இல்லாமல் கால்நடை பராமரிப்பு அலுவலகத்தை முற்றுகை !
அணைக்கட்டு , டிச 23 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பொய்கை சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு
கால்நடை பராமரிப்புத்துறை
கால்நடை மருந்தகம் பொய்கை நிலையத்தை சுற்றி அருகில் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய் போதிய இணைப்பு வசதி இல்லாததால் தாழ்வான பகுதியான கால்நடை மருந்தகம் முழுவதும் குலம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றன இதனால் அங்கு மருத்துவர்கள் கால்நடைகளும் மற்றும் பொது மக்களும் மிகவும் பாதிப்புக்கும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
அணைக்கட்டு தாலுகா செய்தியாளர் பிரவீன்
No comments:
Post a Comment