குடியாத்தம் அருகே
கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
குடியாத்தம் , டிச 24 -
வேலூர் மாவட்டம்,
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பூர் கிராமம், நெட்டேரி வழி, மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அவருக்கு சொந்தமான பசுமாடு விழுந்து விட்டதாக தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தார் உடனே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஊர்தி குழுவினருடன் சென்று கிணற்றில் இறங்கி பசுமாடு உயிருடன் மீட்டு உரிமையாளர் அவர்கள் வசம் ஒப்படைத்து விவரம் சேகரித்து ஊர்தி குழுவினருடன் நிலையம் திரும்பி வந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment