தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயும் ஆல்காட் நினைவாலயம் புத்தாண்டு சிறப்பு வழிபாடு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 January 2025

தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயும் ஆல்காட் நினைவாலயம் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

காட்பாடி தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் ஆல்காட் நினைவாலயம் விருதம்பட்டில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

காட்பாடி, ஜன1-

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த விருதம்பட்டு தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் ஆல் காட் நினை வாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய சிறப்பு வழிபாடு நள்ளிரவு 12 மணியை தொடர்ந்து 3 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த ஆல்காட்  நினைவாலயத்தின் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு  புத்தாண்டு 2025 சிறப்பு வழிபாட்டில் சிறப்பித்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் ஆல்காட் நினைவாலயத்தின் தலைவரும் தலைமை ஆயருமான டி. எஸ். சி. மேனன் தலைமை வகித்து புத்தாண்டு சிறப்பு தகவல்களையும், வாழ்த்துக்களையும், ஆசிர்வாத ங்களையும் இறை மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை ஆயர் ஜெ. சாமுவேல் கம்பீரம், செயலர் என். கிறிஸ்டோபர் வேதக்கண்,பொருளாளர் எம். ராஜன், பயிற்சி ஆயர் ஜி. ஏசு ராஜன் ஆகியோர் வெகு விமரிசையாக செய்திருந்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட வர்களுக்கு கேக் மற்றும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad