வேலுர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் விவசாயிகளுடன் தங்கி கிராமப்புற வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக (08.2.2023) அன்று தென்னை மரங்களை நோய் தாக்குவதில் இருந்து காப்பாற்ற ரூட் டானிக் மருந்தை வேர்களுக்கு செலுத்தும் முறை மற்றும் கருவாட்டு பொறி விதை நேர்த்தி போன்ற செயல்முறை விளக்கங்களை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஜெகத்சரன் திருமால் வசந்த் மனோஜ் குமார் ஆகியோர் அப்பகுதி விவசாயிகளிடம் செய்து காண்பித்தனர். இதில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


No comments:
Post a Comment