வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த முன்னாள் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற நவமணி அவர்களின் கணவரும் சமூக ஆர்வலருமான Rtn. M. லோகநாதன் அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்லூரியின் கல்வியாளர் கே எம் ஜி ராஜேந்திரன் அவர்கள் படத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி அரசு மருத்துவர் உத்தமன் நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ பி மோகன் எம் எஸ் குகன் லாவண்யா குமரன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா ஜே பாஸ்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி நவகுமார் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment