கூட்டத்திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன்ன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் ஆர்.கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, இரா.சிவராமன், டி.இரவிகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி என்.தனசேகரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ச.சச்சிதானந்தம், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட நிர்வாகி த.ஜெயக்குமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க எஸ். ஆனந்த், உள்ளிட்டோர் பேசினர்.

மார்ச்-24ல் மனித சங்கிலி போராட்டம் வேலூர் மாவட்டத்தில் வேலூர் காந்திசிலை, அணைகட்டு, பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்பாடி, குடியாத்தம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன், ஜி.சீனிவாசன், சக்கேயுசத்யகுமார், எம்.ஜெயகாந்தன் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி வேளாண்மை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் ராமன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஜி.கோபி ஆகியோர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
கோரிக்கைகள்:
- பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும். 3.சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும்.
- வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம் செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.
- தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் .
- இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும்.
- அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்
உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ்
No comments:
Post a Comment