வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பங்கு சந்தை முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 14 March 2023

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பங்கு சந்தை முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி குடியாத்தம் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் முறைகெடுக்களுக்கு நடவடிக்கை எடுக்க தயங்கிய மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .



குடியாத்தம் ஸ்டேட் பாங்க் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் வட்டார தலைவர் வீராங்கன் தலைமையில் நடைபெற்றது. குடியாத்தம் எல்ஐசி அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர  தலைவர் விஜயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  ஆடிட்டர் கிருபானந்தம், முகமது  அராபத், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 



ஒன்றிய தலைவர்கள் பெரியசாமி,  தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் விஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் யுவராஜ், சரவணன், பாரத் நவீன்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், குடியாத்தம் வட்டார பொருளாளர் ஆம்புலன்ஸ், வட்டாரத் துணைத் தலைவர்  அன்பரசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்பிரபு, ஒன்றிய நிர்வாகிகள் மலர்வண்ணன், தமிழ்ச்செல்வன், கங்காதரன், வெங்கடேசன், பட்டன், குணசேகரன், லோகேஷ், ஸ்டாலின், ஜெய்சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad