வேலூரில் இன்று ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 March 2023

வேலூரில் இன்று ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்.


வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ  ஜியோ உண்ணாவிரத போராட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ மாபெரும் உண்ணாவிரத போராட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று 05.03.2023 ஞாயிற்று கிழமை நடைபெற்றது. 

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன், ஜி.சீனிவாசன், சக்கேயுசத்யகுமார், எம்.ஜெயகாந்தன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்ட தொடர்பாளராகவும் பல்கலைகழக ஆசிரியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவருமான பேராசிரியர் அய்.இளங்கோவன் உண்ணாவிரத போராட்டத்தினை துவக்கிவைத்து பே பேசினார்.


மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி  வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் ராமன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஜி.கோபி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 


மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் நிறைவுரையாற்றுகிறார். ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம்,  தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உருதுவழி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். 


இக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் 

  1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. அகவிலைப்படி 4%சதவீதம் கடந்த 1.7.2022முதல் வழங்கிட வேண்டும்.
  3. சரண்விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும்.
  4. வெளிமுகமை (Outsourcing) முறையில் அத்து கூலிகளாக தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக  அரசாணை எண்.115;139;152ன்படி நியமனம்  செய்வதை ரத்து செய்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும்.
  5. தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்க்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  6. இடைநிலை மற்றும் முதுகலை   ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 
  7. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும். 
  8. அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்

உள்ளிட்ட 15அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி உண்ணாவிரத போராட்டம்  நடைபெற்றது.

 

- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad