வேலூர் மாவட்டம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு செய்த திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 14 March 2023

வேலூர் மாவட்டம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு செய்த திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் புறநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி K.பழனிச்சாமி  மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (14.3.23) காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார், குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் J.K.N.பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சேட்டு கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், சந்திரா சேட்டு, காடை மூர்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளர்கள் V.ராமு, T.சிவா, D.பிரபாகரன், G.லோகநாதன்Ex MLA, K.M.I.சீனிவாசன், ஆனந்தன், பாபுஜி ராகவன், மணிமாறன், நாகராஜ், உமாபதி, கோவிந்தராஜ், ஜோதி குமார், G.பரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் R.K.அன்பு, M.பாஸ்கர், பூங்கொடி மூர்த்தி, K.M.பூபதி, V.N.தனஞ்செயன், அமுதா கருணா, S.I.அன்வர் பாஷா, S.N.சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், மாவட்ட சார்பணி செயலாளர்கள் S.L.S.வனராஜ், S.S. ரமேஷ் குமார், B.H.இமகிரி பாபு,  மாலிப்பட்டு பாபு, நடிகர் வெங்கடேசன்,  L.D.ஹேமந்த் குமார், மகேந்திரன்,  வெங்கட்ராமன், A.D.கண்ணன்,  சௌந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து சுப்பிரமணி,  கோபி குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், A. சிட்டி பாபு, A.தண்டபாணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு அதிமுக நிர்வாகிகள் சார்பு பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பேரணாம்பட் நகர அதிமுக செயலாளர் L.சீனிவாசன் நன்றி உரை கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர்  கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad