அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 April 2023

அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 50 ஆம் ஆண்டு நினைவு பெற்று பொன்விழா காணும் மாணவர் சங்கம் ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி பள்ளி நல திட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் டி என் அகிலன் தலைமை தாங்கினார், முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் செயலாளர் சடகோபன் வரவேற்றார் நெறியாளர் ஞானசம்பந்தம் மற்றும் மு பஞ்சாட்சரம் இ திருநாவுக்கரசு என் மூர்த்தி எஸ் புருஷோத்தமன் எம் பிரகாசம் சுந்தரேசன் வி ஆறுமுகம்  சந்திரசேகரன் ஆர் சுந்தரேசன் முனியப்பன் மோகன் ஆகியவர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கல்வி  கோ வேந்தர் கோ விஸ்வநாதன் முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சே கு தமிழரசன் தமிழ் செம்மல் புலவர்  பதவினார் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு எம் எஸ் திருநாவுக்கரசு விபி நாகராஜ் ஜி ஆனந்தன் எஸ் குமார் எம் எஸ் சிதம்பரநாதன் ஆவியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஆசிரியர் பெருமக்கள் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.


- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad