வேலூர் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 April 2023

வேலூர் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.


வேலூர் மாவட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்றுநீர்பாசனத்துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சர்  துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக்கூடத்தில் மாநகராட்சி பாதாள சாக்கடை காவேரி, கூட்டு குடிநீர் குழாய் பதிப்புகள் உள்ளிட்ட பணிகளை உடனடியாக முடித்து தர உத்தரவிட்டுள்ளார். 

மேலும் வேலூர் மாநகராட்சி பகுதி சாலைகளை சீரமைப்பது, ஒவ்வொரு  வார்டுகளில் கால்வாய் அமைப்பது குறித்தும் புதிதாக  ரூ.100 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலம் குறித்தும் இந்த ஆய்வு கூட்டத்தில் பேசப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகம் நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் K.N‌.நேரு , மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M. கதிர் ஆனந்த், A.P. நந்தகுமார் எம் எல் ஏ, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் P . கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர்  M.சுனில் குமார், மண்டல குழு தலைவர், திமுகவின் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வில் உடனிருந்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad