வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி ) 1432 ஆம் பசலி நிறைவு விழா இன்று மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 May 2023

வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி ) 1432 ஆம் பசலி நிறைவு விழா இன்று மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் தீர்வாயம்  ஜமாபந்தி 1432 ஆம்  பசலி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலருமான வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். 



இதில் வட்டாட்சியர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நெடுமாறன் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிடத்து வட்டாச்சியா் ரமேஷ் மண்டல துணை வட்டாட்சிய ர் சுபி சந்தர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் நகர மன்ற தலைவர் எஸ் விஜயகுமார் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யா ரங்கம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபு அரசு வழக்கறிஞர்கள் விஜயகுமார் லோகநாதன் வருவாய் ஆய்வாளர்கள் பலராமன் பாஸ்கர் மஞ்சுநாதன் சுகந்தி கிராம நிர்வாக அலுவலர்கள்  மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் வட்ட நிர்வாகிகள் செந்தில் வெங்கடாஜலபதி சசிகுமார் காந்தி ஆகிய பங்கேற்றனர்.


70 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் 25 நபர்களுக்கு ஓய்வு ஊதியம் 9- நபர்களுக்கு விவசாய இடுபொருள்கள் வழங்குதல் 25 நபர்களுக்கு குடும்ப அட்டை மொத்த பயனாளிகள் 247 மொத்த மதிப்பு ரூ.63,24,028.00 இறுதியாக எா்த்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad