கோவில்களில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் நியமனம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 June 2023

கோவில்களில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் நியமனம்.


வேலூர்  மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோயில்களில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்கள் நியமனம்  செய்யப்பட்டதற்கான அரசு ஆணையை நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  துரைமுருகன் வழங்கினார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்  கதிர் ஆனந்த், சட்ட மன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் நா.அசோகன், ஒன்றிய குழுத்தலைவர், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பலர் உடனிருந்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ் 


No comments:

Post a Comment

Post Top Ad