அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 June 2023

அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரி.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை வேலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி லட்சுமி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுண்ணாம்புபேட்டை பகுதியில் 1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா மோடி குப்பம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வார்டு பிரிவுகளை ஆய்வு செய்தார் மேலும் தங்கம் நகரில் உள்ள நகராட்சி கமிஷனர் குடியிருப்பில் திடக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களை ஆய்வு செய்தார்.


அப்போது கையுறை அணியாமல் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டு இந்த தொழிலாளர்களுக்கு கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார் இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி சப் கலெக்டர் வெங்கட்ராமன் தாசில்தார் விஜயகுமார் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஒன்றியக் குழு தலைவர் சத்யானந்தம் உள்பட பல துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad