ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவில் முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 June 2023

ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழாவில் முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் எர்தாங்கல் கிராமத்தில் வரும்  8-ம் தேதி நடைபெற உள்ள ஶ்ரீ கெங்கையம்மா்  திருவிழாவை  முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் எர்த்தாங்கள் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் உதவி ஆய்வாளர் குணசேகரன் ஊர் பிரமுகர்கள், ஒன்றிய துணைத் தலைவர் அருள் முரளி எர்த்தாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு நெடுஞ்செழியன் சாமுண்டீஸ்வரி ஆலய நிர்வாகி துரை வெங்கடேசன் பரந்தாமன் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


எர்தாங்கல் திருவிழா நடத்தப்படுவது தொடர்பாக எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் A  மற்றும்  B இரு தரப்பினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதுவாறு திருவிழா நடத்தப்படும் என்று இரு தரப்பினர் மூலம் உறுதி அளிக்கப்பட்டது, திருவிழா சம்பந்தமாக ஊர் கூட்டம் அடுத்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பே ஊர் கூட்டம் நடத்தி திருவிழாவை நடத்தலாம் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad