தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 July 2023

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று 11.07.20223 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில முடிவின் படி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி, தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசினார் .ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் துரை கருணாநிதி  தமிழக தமிழாசிரியர் கழக மாநில செயலாளர் வாரா, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட் செயலாளர் மா.பா.தீனதயாளன், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாவட்ட பா.வேலு, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜி.சீனிவாசன், நில அளவைத்துறை மாவட்ட நிர்வாகி மகேஸ்வரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.வில்வநாதன், மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.வேந்தன், தெழிலாளர் நலத்துறை பொன்னரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி த்துறை நிர்வாக லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


 

கோரிக்கைகள் 

  1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
  3. சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், உர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குநர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்டுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  4. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பினை ஒப்பவிப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
  5. நிரந்தர பணியிடங்களை அழித்திடும்   அரசாணைகள் எண்.115;139;152ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  6. சாலைப்பணியாளர்களின் 41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும்.

மாலை 5 மணிமுதல் 6.30 மணிவரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 பெண்கள் உள்பட 200 பேர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad