பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து காலை சிற்றுண்டி அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.

திமுகவின் நகரத் தலைவர் ஏ கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் டி எஸ் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். பி எம் கமலநாதன் H பிரகாசம் E ராஜேந்திரன் M  தேவராஜ் முன்னிலை வகித்தனர். பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு  கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் சி என் தட்சணா மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்தனர்.


கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி சுந்தர வதனம் ஆசிரியர் தண்டபாணி அவர்கள் அன்னதான வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எ சௌந்தர்ராஜன் வழக்கறிஞர் கே எம் பூபதி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் குமார் கஜேந்திரன் கே எம் மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். நகர துணை செயலாளர் ஜே மனோகரன் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad