வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் (17 வயது)மாணவி. இவர் அரசுப்பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல் வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
.jpg)
No comments:
Post a Comment