வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் (SFI) சார்பில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் பல்கலைக்கழக நுழைவாயில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறு படிகளை சரிசெய்ய வேண்டும், தேர்வு முடிவுகளை முறையான நேரத்தில் வெளியிட வேண்டும், மறு கூட்டல் தேதியை நீட்டிப்பு செய்திட வேண்டும், பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment